search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரண உதவி"

    • ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.
    • கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராம த்தில் கனமழை காரணமாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.வீடுகள் இடிந்து தவிக்கும் மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சாத்தங்குடி கிராமத்தில் மழையால் வீடுகளை இழந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு. காய்கறி மற்றும் நிவாரண நிதியை ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. வழங்கி ஆறுதல் கூறினார்.

    இதில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் திருப்பதி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட பேரவை செயலாளர் தமிழழகன், மாநில சார்பு அணி நிர்வாகிகள் வெற்றிவேல், சிவசுப்பிரமணி, யூனியன் சேர்மன் லதா ஜெகன், நிர்வாகிகள் சுகுமார், சாமிநாதன், பேரவை பாண்டி, வாகைகுளம் சிவசக்தி, ஆண்டிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விளையாடிக் கொண்டிருந்த போது வாய்க்காலில் சிறுமி தவறி விழுந்தாள்.
    • சிறுமி உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல கிராமங்கள் தனித் தீவாக காட்சியளிக்கின்றன.

    இந்த நிலையில் எருக்கூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி அக்‌சிதா,வீட்டு வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மழைநீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிறுமி அக்‌சிதா உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

    • ஊத்திகுளம் அருகே ஏற்பட்ட விபத்தின் காரணமாக, கர்ப்பிணி பெண் நிவேதா மற்றும் அவரது தாயார் உயிரிழந்தனர்
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    சிவகங்கை மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் அவரது தாயாரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி அவர்களுக்கான நிதியுதவியை அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் நெஞ்சத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நிவேதா என்பவரை பிரசவத்திற்காக உறவினர்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, ஊத்திகுளம் அருகே எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக, கர்ப்பிணி பெண் நிவேதா மற்றும் அவரது தாயார் விஜயலட்சுமி ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன்.

    மேலும் இதே விபத்தில் காயமடைந்த 3 நபர்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டும், சாலைகள் பழுதடைந்தும் உள்ளது.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவாரண உதவிகளை பா.மு.முபாரக் வழங்கினார்

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டும், சாலைகள் பழுதடைந்தும் உள்ளது. இந்த மழையால் பாதிக்கப்பட்ட இந்திரா நகர், எமரால்டு, தக்கர் பாபாநகர், லாரன்ட்ஸ் ஆகிய பகுதிகளை மாவட்ட தி.மு.க. செயலாளர் பா.மு.முபாரக் பார்வையிட்டு, மழை சேதங்களை உடனே சரி செய்திட தொடர்புடைய அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் அங்குள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணபொருட்களையும், வழங்கினார்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, உதகை தெற்கு ஒன்றிய செயலாளர் பரசிவன், பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன், ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் உமா ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
    • மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும், மரங்கள் விழுந்தும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டி லவ்டேல் அருகே கெரடா சாலையில் ஒரு வீட்டின் மீது மரம் விழுந்துள்ளது. ஊட்டி காந்தல் பகுதியில் வீடுகள் சேதம் அடைந்தது.

    இந்த பகுதிகளை நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு.முபாரக் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார்.

    பின்னர் லவ்டேல் ெரயில்வே பாலம், எல்கில் முருகன் கோவில் செல்லும் வழி, ராகவேந்திரா கோவில் முன்புறம் ஆகிய இடங்களில் மரம் விழுந்து மின்கம்பங்கள் துண்டிக்கப்பட்டு உள்ள பகுதிகளை பார்வையிட்டும், உடனே இவற்றை சரி செய்து பொதுமக்களுக்கு மின் இணைப்பு வழங்கிடவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

    அப்போது அவருடன் மாவட்ட துணை செயலாளரும், ஊட்டி நகர மன்ற துணைத் தலைவருமான ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ஊட்டி நகராட்சி தலைவர் வானீஸ்வரி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, நகர துணை செயலாளர் ரீட்டா, மாவட்ட பிரதிநிதிகள் தம்பி இஸ்மாயில், கார்த்திக், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ், உதகை நகர மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், கீதா, விஷ்ணு பிரபு, ரகுபதி, கஜேந்திரன், அபுதாகீர், தியாகு உட்பட கழக நிர்வாகிகள் மஞ்சனக்கொரை ஸ்டான்லி, வெங்கடேஷ், குரூஸ், ஆட்டோ பாபு, குமார், நடராஜ் உட்பட கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

    • கடந்த ஒரு வார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

     ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை மதியம் தொடங்கிய மழை தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை வரை பெய்தது.

    மழையால் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. மீட்புப் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா். மரங்கள் சாய்ந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கூடலூா் முற்றிலுமாக இருளில் மூழ்கியது.

    கூடலூரை அடுத்துள்ள மொளப்பள்ளி, இருவல் பழங்குடி கிராமங்களை வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டதால் வருவாய்த் துறையினா் அப்பகுதியில் வசிக்கும் 20 குடும்பங்களைச் சோ்ந்த 72 பேரை தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கவைத்துள்ளனா்.

    இந்தநிலையில், அமைச்சா் கா.ராமசந்திரன், முகாமில் தங்கவைக்கப்பட்ட பழங்குடி மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா். 

    ×